• Jul 26 2025

சர்ச்சை வீடியோவை வெளியிட்டதால் அதிரடியாக கைது செய்யப்பட்ட நடிகர் கனல் கண்ணன்- கிறிஸ்தவ மதத்தை அவமதித்தாரா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

திரைப்படங்களில் சண்டைக்காட்சி வடிவமைப்பாளரும், நடிகருமான கனல் கண்ணன், இந்து முன்னணி அமைப்பின் கலை இலக்கிய பிரிவு மாநிலச் செயலாளாராகவும் இருக்கிறார்.இவர் அண்மையில் சர்ச்சைக்குரிய வகையில் ட்விட்டர் பதிவு ஒன்றினை வெளியிட்டிருந்தார்.

 அந்த பதிவில் கிறிஸ்துவ மதபோதகர் உடையில் வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் இளம்பெண்ணுடன் நடனமாடுவதாகவும், பின்னணியில் தமிழ் இசைப்பாடல் ஒலிப்பதாகவும் சித்தரிக்கப்பட்டிருந்தது.


வெளிநாட்டு மத கலாச்சாரத்தின் உண்மை நிலை இதுதான்? மதம் மாறிய ஹிந்து மக்களே சிந்தியுங்கள்! என அந்தப் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.அவரின் இந்தப் பதிவு கிறிஸ்தவ மதத்தை அவமதிக்கும் வகையில் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. இது தொடர்பாக திமுகவைச் சேர்ந்த ஆஸ்டின் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். 

அதன் அடிப்படையில் கனல் கண்ணன் மீது சைபர் கிரைம் போலீஸார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இது தொடர்பாக இன்றைய தினம் கனல் கண்ணனை சைபர் க்ரைம் போலீஸார் விசாரணைக்கு அழைத்திருந்தனர். தனது ஆதரவாளர்களுடன் அவர் காவல் நிலையம் சென்றிருந்தார். அப்போது உணவருந்த வெளியே அனுமதிக்கவில்லை என்று குற்றம்சாட்டி கனல் கண்ணன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் போலீஸாருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டிருந்தனர்.


இதனிடையே, ட்விட்டர் சர்ச்சை பதிவு வழக்கை முன்னிறுத்தி கனல் கண்ணனை கைது செய்வதாக போலீஸார் அறிவித்தனர். பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் பதிவு வெளியிட்டது உட்பட பல்வேறு பிரிவுகளில் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement