• Jul 24 2025

முதல் முறையாக கணவருடன் திருப்பதி கோயிலுக்குச் சென்ற நடிகை காஜல் அகர்வால்- அடடே இது தான் விஷேசமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் ராம் சரண் நடிப்பில் வெளியான மகதீரா என்னும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தன் மூலம் சிறந்த நடிகையாக அறிமுகமாகியவர் தான் காஜல் அகர்வால். இவர் இதனைத் தொடர்ந்து தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில நடித்திருக்கின்றார்.


இது தவிர பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்த இவர் கடந்த ஆண்டு கௌதம் கிச்சிலு என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு ஆண் குழந்தையும் அண்மையில் பிறந்தது. இதனை அடுத்து தற்பொழுது உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார்.

அதாவது இந்தியன் 2 திரைப்படத்திற்காகவே உடற்பயிற்சியில் அதிகளவு ஈடுபட்டு வருகின்றார்.இப்படத்தின் படப்பிடிப்பும்  தற்போது திருப்பதியில் நடைபெற்று  வருகின்றது.இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட காஜல் அகர்வால் ஓய்வு நேரத்தில் தனது கணவருடன் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளன.


திருப்பதியில் தரிசனம் செய்து முடித்த காஜல் அகர்வாலுக்கு தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த காஜல் அகர்வால், ‘திருமணம் முடிந்து முதல் முறையாக தற்போது திருப்பதி கோயிலுக்கு வந்து இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்றும் இந்தியன் 2 படப்பிடிப்புக்காக கணவருடன் திருப்பதி வந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Advertisement

Advertisement