• Jul 26 2025

ரசிகர்களிடம் திடீரென மன்னிப்பு கேட்ட நடிகை ராஷ்மிகா-வெளியானது காரணம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

இந்திய திரைப்பட ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் நடிகைகளில் ஒருவராக விளங்குபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.

இவர் 2016 இல் ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் கன்னட மொழியில் வெளியான ‘கிரிக் பார்ட்டி’ என்ற திரைப்படத்தில் ரக்‌ஷித் ஷெட்டிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

கன்னடம், தமிழ், மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல திரைப்படங்களின் நடித்து புகழ் பெற்ற இவர் தற்போது விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் நடித்து வருகின்றார்.

தனது தனித்துவமான நடிப்பின் மூலம் ரசிகர்கள் மத்தியில் குறுகிய காலத்தில் தனி இடம் பிடித்த ராஷ்மிகா தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறுஇருக்கையில் தெலுங்கு, ஹிந்தியிலும் அவர் சில படங்கள் நடித்து வருகிறார்.ராஷ்மிகா நடித்து இருக்கும் சீதா ராமம் படத்தின் பிரெஸ் மீட் சென்னையில் நடந்தபோது அவர் வரவில்லை. மேலும் புஷ்பா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் சென்னையில் நடந்தபோது அவர் வரவில்லை.

மேலும் அதை குறிப்பிட்டு ஒரு பத்திரிகையாளர் கேள்வி கேட்க "இந்த வருடம், அடுத்த வருடம் என்னை அதிகம் பார்க்கப்போகிறீர்கள்.. நம்புங்கள். ஏற்கனவே இருந்த கமிட்மென்ட் காரணமாக இன்று வர முடியவில்லை" என ராஷ்மிகா பதில் அளித்து இருக்கிறார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement