• Jul 25 2025

திருமணம் எப்போது... கர்ப்பத்தைப் பற்றிக் கூறிய நடிகை டாப்ஸி...!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல இந்தியத் திரைப்பட நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் டாப்ஸி பன்னு. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், மற்றும் இந்தி எனப் பல மொழிகளிலும் பணியாற்றி வருகின்றார். அதிலும் குறிப்பாக தமிழில் இவர் 'ஆடுகளம், வந்தான் வென்றான்' போன்ற பல படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். 


படங்களில் மட்டுமல்லாது நடிகை டாப்ஸி சமூக வலைத்தளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். அதில் அடிக்கடி ரசிகர்களின் கேள்விக்குப் பதிலளித்து வருவார். அந்தவகையில் சமீபத்தில் டாப்ஸியிடம் ரசிகர் ஒருவர் "எப்போது திருமணம் செய்ய போகிறீர்கள்" எனக் கேட்டுள்ளார். 


அதற்கு டாப்ஸி பதிலளிக்கையில் "நான் இன்னும் கர்ப்பம் ஆகவில்லை. அதனால் திருமணம் இப்போதைக்கு இல்லை. நடக்கும்போது சொல்கிறேன்" எனக் கூறி இருக்கிறார். இருப்பினும் டாப்ஸி சமீபகாலமாக பிரபல பாட்மிண்டன் வீரர் மாத்தியாஸ் போ என்பவருடன் இணைத்துக் கிசுகிசுக்கப்பட்டு வருகின்றமை நம் அனைவருக்கும் தெரியும். 


அதுமட்டுமல்லாது அவர்கள் இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படங்களையும் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. மேலும் டாப்ஸி கர்ப்பத்திற்குப் பின்னர் தான் கல்யாணம் என்று கூறியது ஆலியாபட் மற்றும் ரன்வீர் சிங் ஐ இதன்மூலமாக மறைமுகமாக சுட்டிக் காட்டியிருப்பதாகவும் ஒரு சிலர் கூறி வருகின்றனர்.


Advertisement

Advertisement