• Jul 25 2025

அந்த படத்திற்காக நடிகை திரிஷா வாங்கிய சம்பளம் இத்தனை கோடிகளா? வாயடைத்து போன ரசிகர்கள்...!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

பிரம்மாண்டத்தின் பிரம்மாண்டமாக கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் பொன்னியின் செல்வன்.மணி ரத்னம் இயக்கத்தில் உருவான இப்படம் மாபெரும் வெற்றியடைந்தது.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற இந்த படம் அதிக வசூலினையும் அள்ளிக்குவித்தது.நல்ல விமர்சனங்களையம் பெற்று வெற்றிநடை போட்டது.

 இப்படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராம் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.ரூ. 500 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த இப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற 28ஆம் தேதில் உலகளவில் வெளியாகிறது.

இப்படத்தில் குந்தவை எனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை திரிஷா. இவர் இப்படத்தில் நடிக்க ரூ. 3 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement