• Jul 25 2025

அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை.. மனம் திறந்து உண்மையை கூறிய நடிகை பிரியா பவானி

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து கைவசம் பல படங்களுடன் வளரும் இளம் நடிகைகள் பட்டியலில் இருப்பவர் நடிகை ப்ரியா பவானி சங்கர்.இவர் செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பின் சீரியல்களில் நடித்து பெரிய அளவில் பாப்புலர் ஆன அவர் அதன் பின் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

தற்போது இவர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள "பத்து தல" படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகின்ற மார்ச் 30 -ம் தேதி வெளியாகவுள்ளது.

எனினும் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பிரியா பவானியிடம் தொகுப்பாளர் சினிமாவில் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை குறித்து கேள்வி கேட்டுள்ளார்.

அதற்கு பதில் அளித்த அவர், " நான் தொலைக்காட்சியில் பணியாற்றும் போது இருந்து தற்போது வரை யாரும் என்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்ததில்லை".

"எனக்கு பல நண்பர்கள் இருக்கிறார்கள் ஆனாலும் அந்த மாதிரி நடந்து கொண்டதில்லை. சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கிறது. நான் இல்லை என்று சொல்லவில்லை" என்று பிரியா பவானி தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement