• Jul 25 2025

ரியாவைத் தொடர்ந்து ராஜா ராணி சீரியலில் இருந்து விலகிய மற்றுமொரு நடிகை- அடடே இவரும் விலகிட்டாரா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் சந்தியாவாக ஆலியா மானசா நடித்து வந்த நிலையில் அவர் வெளியேறினார்.

இதையடுத்து சந்தியாவாக ரியா விஸ்வநாத் நடிக்க தொடங்கினார்‌. இவர் சந்தியாவாக நடிக்க தொடங்கி ஒரு வருடம் ஆகும் நிலையில் தற்போது இந்த சீரியலில் இருந்து விலகி விட்டார். இவரைத் தொடர்ந்து ஆஷா என்பவர் சந்தியாக நடித்து வருகின்றார்.


மேலும் அர்ச்சனா காரெக்டரில் நடித்து வந்த விஜே அர்ச்சனாவும் விலகி விட்டதோடு அவருக்கு பதிலாக முத்தழகு சீரியல் அர்ச்சனா அந்தக் கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார். இவ்வாறு கதாப்பாத்திரஙகள் இந்த சீரியலில் அடிக்கடி மாறுவதால் ரசிகர்களை கடுப்படையச் செய்துள்ளது.

இப்படி ஒரு சூழ்நிலையில் இந்த சீரியலில் பார்வதி கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த வைஸ்ணவியும் விலகி விட்டதாக கூறப்படுகின்றது.காரணம் அவர் தற்பொழுது விஜய் டிவியில் புதிதாக ஒளிபரப்பப்படவுள்ள பொன்னி என்னும் சீரியலில் மெயின் ரோலில் நடித்து வருகின்றார்.இந்த சீரியலின் ப்ரோமோ கூட வெளியாகியுள்ளது.


மேலும் நீண்ட நாட்களாக ராஜா ராணி சீரியலில் பார்வதி கதாப்பாத்திரத்திற்கான எந்தக் கதையும் காண்பிக்கப்படவில்லை. அதே நேரம் புதிய சீரியலில் நடிக்கும் இவருக்கு ரசிகர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement