• Jul 24 2025

துபாயில் தீவிர யோகா பயிற்சியில் ஈடுபட்டு வரும் அனுஷ்கா- திடீர் முடிவுக்கு இது தான் காரணமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

நடிகை அனுஷ்கா துபாயில்  யோகா ஆசிரியரிடம் யோகா பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறாராம் என புதிய தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக பிஸியாக நடித்து வந்தவர் அனுஷ்கா.தமிழில் இவர் நடித்த அனைத்து திரைப்படங்களும் ரசிகர்களைக் கவர்ந்திருக்கின்றன.அதிலும் இவர் பெண் கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து ரசிகர்களின் ஆதரவைப் பெற்றார்.


அதாவது இவர் நடிப்பில் வெளியாகிய அருந்ததி, ருத்ரமாதேவி  பாகுபலி ஆகிய திரைப்படங்கள் இவருக்கு பெயரும் புகழையும் தேடித் தந்ததோடு இவரை ராணி நடிகையாகவே சித்தரித்தது.ஆனால் இஞ்சி இடுப்பழகி படத்துக்கு பின்னர் அவர் அதிகமான படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார்.

 அதிலும் தமிழ் படங்களில் அவர் தலைகாட்டவே இல்லை. இந்நிலையில் இப்போது துபாயில் கடந்த சில மாதங்களாக முகாமிட்டு தன்னுடைய யோகா ஆசிரியரிடம் யோகா பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறாராம். விரைவில் அவர் அடுத்து ஒரு படத்தில் நடிக்க தயாராகி வருகிறார் என்று சொல்லப்படுகிறது.

Advertisement

Advertisement