• Jul 25 2025

குழந்தையைக் கடத்திய ரவுடிக் கும்பல்.. சந்தியாவின் காலில் விழுந்த அர்ச்சனா.. இனி நடக்கப்போவது என்ன.. 'ராஜா ராணி 2' ப்ரோமோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. மற்ற சீரியல்களை போலவே இந்த சீரியலிலும் அடிக்கடி அதிரடித் திருப்பங்கள் நிகழ்ந்த வண்ணம் தான் இருக்கின்றன. 

அந்தவகையில் தற்போது இன்றைய நாளுக்குரிய ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது. அதில் யாருக்கும் தெரியாமல் குழந்தையை பரிகாரத்திற்கு தூக்கிட்டுப் போக என்று வந்த அர்ச்சனாவிடமிருந்து ரவுடிக் கும்பல் ஒன்று குழந்தையைப் பறித்துச் செல்கின்றது.


அதற்கு அர்ச்சனா அழுது குழறி ஒப்பாரி வைக்கின்றார். அங்கு ஓடிவந்த சந்தியா, சிவகாமி அர்ச்சனாவிடம் என்ன என்று கேட்கின்றனர். அதற்கு அர்ச்சனா " குழந்தையை கடத்திட்டுப் போய்ற்றாங்க, எப்பிடியாவது காப்பாத்திக் கொடு சந்தியா, உன் காலில் வேணும் என்றாலும் விழுறேன்" எனக் கூறி சந்தியாவின் காலில் விழுந்து அழுகின்றார்.

அதற்கு உடனே சந்தியா "பக்கத்துக்து வீட்டுக் குழந்தை மேல இவ்வளவு அக்கறை" எனக் கேட்டு தனது மனதிற்குள் யோசிக்கின்றார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது.


Advertisement

Advertisement