• Jul 25 2025

ராஜா ராணி சீரியல் நடித்த இவங்க ரெண்டு பேரும் காதலிக்கிறாங்களா?-வெளியான புகைப்படம்! கல்யாணம் ஆகிருச்சா?

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிப்பரப்பாகும் சீரியலில் ராஜா ராணி சீசன் 2-ம் ஒன்று. இந்த சீரியல் ஏற்கனவே ஹிந்தி சீரியலை டப் செய்து என் கணவன் என் தோழன் என்ற பெயரில் தமிழில் வெளியாகியிருந்தது. அந்த சீரியலின் ரீமேக் தான் இந்த சீரியல்.

ஐபிஎஸ் ஆக வேண்டும் என்று கனவோடு இருக்கும் பெண்ணுக்கு திருமணம் செய்து கொடுத்து விடுகிறார்கள், அதன் பின் தன்னுடைய மனைவியின் ஆசையை நிறைவேற்ற, சரவணன் என்னவெல்லாம் செய்கிறார் என்பது தான் இந்த கதை.


இந்த கதையில், சில நாட்களுக்கு முன் வரை ஐபி.எஸ் ட்ரெய்னிங் காட்சிகள் ஒளிப்பரப்பாக்க பட்டது. அதில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிகை லோகேஷூம், தியாவும் நடித்து வந்தனர். அவர்கள் இருவரும் மாலையும் கையுமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து காதலைப் பற்றிய கவிதை ஒன்றையும் பதிவிட்டிருந்தனர்.


அதைப் பார்த்த பலரும், இருவருக்கும் திருமணமா? காதலிக்கிறார்களா? என்றெல்லாம் அடுத்தடுத்த கேள்விகள் கேட்டனர். ஆனால் அது ஒரு போட்டோ சூட்டிற்காக எடுத்த புகைப்படம் மட்டுமே என்று நடிகர் லோகேஷ் இப்போது விளக்கம் கொடுத்துள்ளார். மேலும் இந்த சீரியலில் இதுவரை சந்தியாவாக நடித்து வந்த ரியா விலகியதால் தற்பொழுது ஆஷா என்பவர் கதாநாயகியாக நடித்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.





Advertisement

Advertisement