• Jul 24 2025

மாலினி பற்றிய எல்லா உண்மைகளையும் சொன்ன செழியன்- அதிர்ச்சியில் உறைந்து நின்ற பாக்கியா-Baakiyalakshmi Promo

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கிலட்சுமி. இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்காக ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பாக்கியா, அமிர்தாவின் கணவரைச் சந்தித்து எழிலையும் அமிர்தாவையும் பிரிக்க வேண்டும் என்று சொல்கின்றார். ஆனால் கணேஷ் அமிர்தாவையும் நிலாவையும் தன்னுடன் தான் கூட்டிட்டு போகப் போறேன் என்று இருக்கிறார். இதனால் எழிலின் வாழ்க்கையை எப்படிக் காப்பாற்றப்போகின்றார் என்று தெரியவில்லை.

மறுபுறம் பாக்கியா, கோயிலில் நின்று பேசிக் கொண்டிருக்கும் போது அங்கு வரும் மாலினி செழியனுக்கு போன் பண்ணி சொல்லி விட்டு செழியன் வந்ததும் பாக்கியாவிடம் எல்லா உண்மைகளையும் சொல்லப்போகின்றார். அப்போது மாலினியைத் தடுத்து செழியன் அனுப்பி விடுகின்றார்.

இதனைப் பார்த்த பாக்கியா மாலினிக்கும் உனக்கும் என்ன சம்மந்தம் என்று கேட்கின்றார். அப்போது செழியன் எல்லா உண்மையையும் சொல்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.


Advertisement

Advertisement