• Jul 25 2025

ராதிகாவை கூட்டிக் கொண்டு வெளியே போக சொன்ன பாக்கியா- அதிர்ச்சியில் உறைந்த கோபி- பரபரப்பான ப்ரோமோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் பழனிச்சாமிக்கும் பாக்கியாவிற்கும் திருமணம் நடைபெறப்போவதாக கோபி நினைததுக் கொண்டு புலம்பிக் கொண்டே திரிந்தார்.

இறுதியில் பாக்கியாவுக்கு திருமணம் இல்லை பழனிச்சாமிக்கு தான் வெறொரு பொண்ணுடன் திருமணம் என்பதை அறிந்த கோபி சந்தோஷமாக இருக்கின்றார். இருப்பினும் பழனிச்சாமி அவருடைய வீட்டிற்கு வரவது கோபிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.


எல்லோரையும் பழனிச்சாமி தன்னுடைய பக்கம் இழுத்து விட்டான் என செம கோபத்தில் இருக்கின்றார். இந்த நிலையில் தற்பொழுது ஓர் ப்ரோமோ வெளியாகியுள்ளது.இதில் ராதிகா ஈஸ்வரியிடம் குரல் உயர்த்திப் பேசுகின்றார்.

இதனால் ஆத்திரமடைந்த பாக்கியா ராதிகா மீது கோபப்பட ராதிகா இது என்னோட வீடு என உரிமை கொண்டாட கோபியும் 18 லட்சம் நீ இன்னும் தரணும் என்று பாக்கியாவுக்கு சொல்ல பாக்கியா, இன்னும் ஒரு மாதத்துக்குள்ளே அந்த காசைத் தருவேன். நீங்க குடும்பத்தைக் கூட்டிக் கொண்டு வெளியில் போகனும் என்று சொல்கின்றார்.

இதனால் கோபியும் ராதிகாவும் அதிர்ச்சியடைந்து உறைந்து போய் நிற்கின்றனர்.இதனால் அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement