• Jul 26 2025

கதறி அழுது கண்ணீர் வடித்த தனம்-பிக்பாஸ் வீடே சோகத்தில்-நடந்தது என்ன..? வெளியானது வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த மாதம் அக்டோபர் 9-ம் தேதி தொடங்கியது.

முதல் வார இறுதியில் எலிமினேஷன் இல்லாத நிலையில் இரண்டாவது வாரம் இரண்டு பேர் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினர். முதலாவதாக ஜிபி முத்து நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக வீட்டை விட்டு வெளியேறினார். அடுத்ததாக எலிமினேஷன் லிஸ்ட்டில் இருந்த டான்ஸ் மாஸ்டர் சாந்தி குறைவான வாக்குகளை பெற்றதல் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். எனினும் அதனை தொடர்ந்து அடுத்த அடுத்த வாரங்களில் தொடர்ந்து அசல், ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் மற்றும் குயின்சி ஆகியோர் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டனர்.

இந்நிலையில் மீதம் உள்ள 13 போட்டியாளர்களுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடந்து ஒளிபரப்பபடுகிறது. இந்த வார கேப்டனாக மணிகண்டன் தேர்வான நிலையில், ஆயிஷா, ஜனனி, ராம், அசீம், ஏடிகே, கதிரவர்ன் ஆகியோர் இந்த வார எவிக்‌ஷனுக்காக நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

எனினும் இதனை தொடர்ந்து இந்த வாரம் முழுவதும் பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரும் பல கதாப்பாத்திரங்களாக மாறி தங்களது திறமைகளை வெளிபடுத்தி வருகின்றனர். 

இந்நிலையில் தற்போது இரண்டாவது ப்ரமோ வெளியாகி உள்ளது.அதில் வடிவேலாக பாத்திரம் ஏற்று நடிக்கின்றார் தனலட்சுமி.அதில் அவருக்கு ஒரு கதை கூறப்படுகின்றது.உன்னோட பெண்ணின் கல்யாணத்திற்காக சேர்த்து வைத்த பணம் முழுத்தும் இல்லாமல் போய்விட்டது.அதற்கு நீ என்ன செய்வாய்....இதை ஏற்று நடிக்க வேண்டும் எனக் கூறப்படுகின்றது. இவ்வாறு நடிக்கும் போது கண்ணீர் வடித்து கதறி அழுகின்றார் தனலட்சுமி.இவ்வாறுஇருக்கையில்  பிக்பாஸ் வீடே சோகத்தில் மூழ்கியுள்ளது.

இதோ அந்த ப்ரமோ




Advertisement

Advertisement