• Jul 25 2025

தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்பட ஷுட்டிங்கில் நடந்த குண்டு வெடிப்பு- படப்பிடிப்பை நிறுத்த உடனடி உத்தரவு

stella / 2 years ago

Advertisement

Listen News!


இயக்குநர் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தான் கேப்டன் மில்லர். இப்படத்தில் சிவ ராஜ்குமார், பிரியங்கா மோகன், சந்தீப் போன்ற பல நடிகர்கள் நடித்து வருகின்றனர்.

இப்படம் 1930 -ம் காலகட்டத்தில் நடந்த சம்பவத்தை மையமாக வைத்து இப்படம் தயாராகி வருகிறது.  தற்போது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முண்டன் துறையில் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் ஷூட்டிங் மும்முரமாக நடந்து வருகிறது. 


இந்நிலையில் வனப்பகுதியில் டம்மி குண்டுகளை வெடிக்கவைத்தும், தீ மூட்டி சில காட்சிகளை எடுப்பதால் விலங்குகளை அச்சுறுத்தும் வகையில் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளது.

இதனால் முறையாக அனுமதி பெறாமல் குண்டு வெடிக்கும் காட்சி படமாக்கப்பட்டதால் படப்பிடிப்பை நிறுத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.இந்தச் சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement