• Jul 25 2025

வாரிசு திரைப்படத்தைப் பார்த்து கண்ணீர் விட்டு அழுத பிரபலம்- புகைப்படத்துடன் அவரே போட்ட முக்கிய பதிவு

stella / 2 years ago

Advertisement

Listen News!


தளபதி விஜய்யின் வாரிசு திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், விஜய்யின் தீவிர ரசிகர்கள் கோவிலில் சிறப்பு வழிபாடு, தோப்புக்கரணம், அன்னதானம் என அலப்பறை கொடுத்து வருகின்றனர்.

அத்தோடு இப்படம் கூட்டுக்குடும்பத்தின் முக்கியத்துவத்தை சொல்லும் திரைப்படமாக உருவாகி உள்ளது. நடிகர் விஜய் நீண்டநாட்களுக்கு பிறகு குடும்ப செண்டிமென்ட் கதையில் நடித்துள்ளார்.இதில் விஜய்யின் அப்பாவாக சரத்குமாரும், அம்மாவாக ஜெயசுதாவும், பிரபு,ஷ்யாம்,தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் அண்ணன்களாக நடித்துள்ளனர்.


 விஜய்யின் தீவிர ரசிகையான ராஷ்மிகா விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் படத்தின் முதல் நாள் முதல் காட்சி அதிகாலை 4 மணிக்கு தொடங்கும் நிலையில் அதை பார்க்கத்தான் ரசிகர்கள் எல்லோரும் வெறித்தனமாக காத்திருக்கின்றனர்.

 இந்நிலையில் இன்று வாரிசு டீமுடன் விஜய் படம் பார்த்து இருக்கிறார். அப்போது எடுத்த போட்டோவை இசையமைப்பாளர் தமன் பகிர்ந்து இருக்கிறார்.வாரிசு படத்தை பார்த்து அதிகம் எமோஷ்னல் ஆனதாக தமன் தெரிவித்து இருக்கிறார்.


"அண்ணா விஜய் அண்ணா.. எமோஷ்னல் சீன்களை பார்த்து இதயபூர்வமாக அழுதேன். கண்ணீர் விலைமதிப்பில்லாதது" என தமன் குறிப்பிட்டு இருக்கிறார். இதனால் வாரிசு திரைப்படத்தை திருவிழாவாக கொண்டாட ரசிகர்கள் தயாராகி விட்டார்கள். 

Advertisement

Advertisement