• Jul 25 2025

ஹைதராபாத்தில் இரண்டு பங்களாக்களை வாங்கிய நயன்தாரா- குவியும் வாழ்த்துக்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!


தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத முக்கிய நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டாராகவும் வலம் வருபவர் தான் நயன்தாரா. இவர் பிரபல இயக்குநரான விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணம் மிகவும் பிரமாண்டமாகும் நடைபெற்றது.

அவர் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து வருவதோடு ஒரு திரைப்படத்திற்கு சுமார் 10 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார் என்றும் கூறப்படுகின்றது.


இந்த நிலையில் சென்னையில் நடிகை நயன்தாராவுக்கு ஏற்கனவே வீடுகள் மற்றும் இடங்கள் இருக்கும் நிலையில் தற்போது ஹைதராபாத்தில் இரண்டு பங்களாக்களை அவர் வாங்கி உள்ளதாகவும் இந்த பங்குகளின் விலை 30 கோடி என்றும் கூறப்படுகிறது 

மேலும் சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை சொத்துக்களாக வாங்கி குவித்து வருகிறார் என்பதும் அதேபோல் வியாபாரத்திலும் முதலீடு செய்து வருகிறார் . இதனால் ரசிகர்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement