• Jul 26 2025

செம்பருத்தி சீரியல் ஷபானா மற்றும் அவரது கணவருக்கு குவியும் வாழ்த்துக்கள்- அடடே இது தான் காரணமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களைக் கவரும் விதமாக பல சீரியல்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் சூப்பர் ஹிட்டாக ஓடி முடிவடைந்த சீரியல் தான் செம்பருத்தி. இந்த சீரியலில் பார்வதி என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபல்யமானவர் தான் ஷபானா.

இவர் இந்த சீரியலில் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை சூப்பராக நடித்து ஏராளமான ரசிகர் பட்டாளத்தைக் கவர்ந்தார்.மேலும் இவர் கடந்த ஆண்டு பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்த ஆரியன் என்பவரைக் காதலித்து திருணம் செய்து கொண்டார்.


திருமணத்திற்குப் பிறகும் இருவரும் தமது கெரியரில் கவனம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் ஆர்யன் ஷு தமிழில் ஒரு சீரியலில் நடித்து வருகின்றார். ஷபானா சன்டிவியில் புதிய சீரியலில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

இந்த நிலையில் இன்று இவர்கள் தமது முதலாவது திருமண ஆண்டினைக் கொண்டாடி வருகின்றனர். இவர்களுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement