• Jul 25 2025

அசீமின் முகத்தில் முட்டையடிக்கும் போட்டியாளர்கள்... கடைசியில சேவகரா... வெளியானது கலக்கல் ப்ரோமோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பல மொழிகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் ஒரு நிகழ்ச்சி தான் 'பிக்பாஸ்'. இந்நிகழ்ச்சியில் தற்போது தமிழில் 6வது சீசன் ஒளிபரப்பப்பட்டு உள்ளது. 50 நாட்களை கடந்து மிகவும் விறுவிறுப்பாக செல்லும் இந்த நிகழ்ச்சியில் 7பேர் வெளியேறி தற்போது 14 பேரே உள்ளார்கள்.

நாட்கள் நகர்ந்து செல்ல செல்ல இந்நிகழ்ச்சியானது விறுவிறுப்பிற்கும் பஞ்சமில்லாமல் சென்று கொண்டு இருக்கின்றது. கடந்த சீசன்களைப்போல இந்த சீசனும் கமலே தொகுத்து வழங்குகின்றார். 

இந்த வாரத்திற்கான டாஸ்க்காக போட்டியாளர்கள் இரண்டு அணிகளாக பிரிந்து ஒருகுழு பழங்குடி மக்களாகவும் மற்றொரு குழு ஏலியன்களாகவும் விளையாடி வருகின்றார்கள்.


இந்நிலையில் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரமோ வெளியாகி உள்ளது. அதில் போட்டியாளர்கள் அசீமின் தலை மற்றும் முகத்தில் முட்டை அடிக்கின்றார்கள். அதற்கு அசீம் "இறைவன் மீது ஆணையாக நான் சிரிக்கவும் இல்லை, அழவும் இல்லை" எனக் கூறுகின்றார். 

மேலும் பிக்பாஸ் "ஏலியன்ஷின் தீர்ப்பின்படி அசீம் சேவகராகி விட்டார்" எனக் கூறுகின்றார். அதுமட்டுமல்லாது அசீம் தனக்கு அடிச்சது ஊர் முட்டை எனக் கூறுகின்றார். இவ்வாறாக இன்றைய ப்ரோமோ வெளி வந்திருக்கின்றது.

இதோ அந்த ப்ரோமோ வீடியோ..!


Advertisement

Advertisement