• Jul 25 2025

குக்வித் கோமாளி ஷோவில் கலந்து கொண்ட மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியின் நடுவர்- இன்னும் யாரெல்லாம் வந்திருக்கிறாங்க தெரியுமா?

stella / 3 years ago

Advertisement

Listen News!

உலக தமிழ் ரசிகர்களைக் கவரும் விதமாக சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் குக்வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது மூன்றாவது சீசன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. ரக்ஷ்ன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக செஃப் தாமு மற்றும் செஃப் வெங்கடேஷ் பட் இருக்கின்றனர்.

இந்நிகழ்ச்சி விறுவிறுப்பாக இறுதி போட்டியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. அந்த வகையில் இன்றைய தினம் செமி பைனல் நடை பெறவுள்ளது.

இதனை முன்னிட்டு சிறப்பு விருந்தினராக மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் நடுவராக இருந்த கௌசிக் மற்றும் நடிகை தேவதர்சினி ஆகிய இருவரும் பங்குபற்றப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் இந்த வாரம் இறுதிச் சுற்றுக்கு தேர்வாகியவர்களின் விபரம் தெரிந்து விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement