• Jul 26 2025

மீண்டும் குடும்பத்தை ஒண்டு சேர்க்க முயலும் தனம்...சவால் விடும் ஜனார்த்தனன்..நடக்கப்போவது என்ன..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டின் ஸ்டோர்ஸ்.தற்போது ஒற்றுமையாக வாழ்ந்த அண்ணன் தம்பிகளுக்கு இடையில் பிரச்சனை ஏற்பட்டு தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரமோ வெளியாகி  உள்ளது.அதாவது முல்லைக்கு வளைகாப்பு செய்வதற்கு அவரின் அம்மா மற்றும் அப்பா வந்து மூர்த்தியிடம் பேசுகின்றனர்.அதற்கு அவர்களும் சம்மதித்து விடுகின்றனர்.

இவ்வாறுஇருக்கையில் தனம் மீனாவின் வீட்டிற்கு வந்து வளைகாப்பு விசயத்தை கூறுகின்றார்.இத்துடன் இரண்டு குடும்பமும் ஒன்றாகி விடும் என தனம் எண்ணுகின்றார்.

இவ்வாறு தனம் எல்லோரிடமும் பேசிவிட்டு வெளியே வந்ததும் ஜனார்த்தனன்...“ நீங்க போடுற நாடகம் ஒன்றும் இனிமேல் மாப்பிள்ளையிட்ட வேலைக்கே ஆகாது..மீனாவும் மாப்பிள்ளையும் அங்க வருவாங்க...திரும்பி ஒண்டு சேருவாங்க என கனவிலையும் நினைக்காதீங்க.....” என சவால் விடுகின்றார்.

இதற்கு தனம்...“ எங்களை பிரிஞ்சு ஜீவாவாலையும் மீனாவாலையும் இருக்க முடியாது என தனமும் திருப்பி பதிலடி கொடுத்து விட்டு கிளம்புகின்றார்.இத்துடன் இன்றைய ப்ரமோ முடிவடைகின்றது.



Advertisement

Advertisement