• Jul 25 2025

தனுஷின் வாத்தி படத்தின் மீது பரபரப்பு புகார்- வெளியாவதில் ஏற்பட்ட புதிய சிக்கல்- குழப்பத்தில் படக்குழு

stella / 2 years ago

Advertisement

Listen News!

 தமிழ் தெலுங்கு ஆகிய மொழியில் வரும் 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள திரைப்படம் தான் வாத்தி.இயக்குநர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் தமிழக விநியோக உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. 

இந்நிலையில், இந்த படத்தின் தலைப்பு ஆசிரியர்களின் மாண்பை குலைக்கும் விதமாக உள்ளதாக ஆசிரியர்கள் சங்கத்தினர் பரபரப்பு புகார் அளித்துள்ளனர்.இது தொடர்பாக புதுச்சேரி மாநில ஆசிரியர்கள் கூட்டமைப்பு முதலமைசர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்து மனு அனுப்பியுள்ளனர். 


அதில், நடிகர் தனுஷ் நடித்துள்ள படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. அதற்கு 'வாத்தி' என்று பெயர் வைத்துள்ளனர். இதே படம் தெலுங்கில் 'சார்' என்ற பெயரில் வெளியாகிறது. தமிழில் மட்டும் ஆசிரிய சமூகத்தை அவமதிக்கும் வகையில் 'வாத்தி' என்ற பெயரில் வெளியாக இருக்கிறது.


இதனால் படத்தின் பெயரை மரியாதையான வார்த்தைகளால் 'வாத்தியார்' என்றோ, தெலுங்கில் வைத்ததுபோல 'சார்' என்றோ தமிழில் படத்தின் பெயரை மாற்றி வெளியிட வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் 'வாத்தி' படம் திட்டமிட்டபடி வெளியாகுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தனுஷ் படத்திற்கு வந்துள்ள இந்த திடீர் சிக்கல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement