• Jul 24 2025

பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம்ரவிக்கு இப்படி ஒரு விஷயம் நடந்துள்ளதா?- அடடே இதுவரை இதை யாரும் யோசிச்சிருக்க மாட்டாங்களே

stella / 2 years ago

Advertisement

Listen News!

தான் மூன்று அழகிகளுடன் நடித்துள்ளதாக நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இப்படமானது எழுத்தாளர் கல்கியின் நாவலை அடிப்படையாகக் கொண்டு தோற்றம் பெற்றது.இப்படத்தின் முதல் பாகம் 30 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.

மேலும் இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி கேரளாவிற்கு பொன்னியின் செல்வன் படக்குழு சென்று இருந்தது அங்கு எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலாகின.அத்தோடு ப்ரமோஷன் பணிகளில் படக்குழு வேகமாக ஈடுபட்டு வருகின்றது.


அந்த வகையில்  நடிகர் ஜெயம் ரவி  அண்மையில் அளித்துள்ள பேட்டியில் தன்னுடன் நடித்த நடிகைகள் குறித்த சுவாரஸ்யமான தகவலை கூறியுள்ளார்.அதாவது உலக அழகி பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராய், மிஸ் சென்னை பட்டம் வென்ற திரிஷா, மிஸ் இந்தியா பட்டம் வென்ற ஷோபிதா என மூன்று அழகிகளுடன் நடித்துள்ளதாக ஜெயம் ரவி பேசியுள்ளார்.

மேலும் இப்படத்தில் ஜெயம் ரவியுடன் கார்த்தி விக்ரம் த்ரிஷா ஐஸ்வர்யா ராய் ஆகியோரும் இன்னும் பல நட்சத்திரங்களும் டித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement