• Jul 25 2025

அர்னவ் கைவிட்டாலும் கைக்குழந்தையுடன் ஷுட்டிங்கிற்கு சென்று வரும் திவ்யா ஸ்ரீதர்- வைரலாகும் வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் செவ்வந்தி என்னும் சீரியலில் நடித்ததன் மூலம் பிரபல்யமானவர் தான் திவ்யா ஸ்ரீதர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் செல்லம்மா சீரியல் கதாநாயகன் அர்னவ்வை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமான சில மாதங்களிலேயே வந்த சர்ச்சைகள் சின்னத்திரையில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

செவ்வந்தி சீரியலில் ஹீரோயினாக நடித்து வரும் திவ்யா ஸ்ரீதர் கர்ப்பமாக இருந்த நிலையில் தன்னை கணவர் அர்னவ் உதைத்து கொடுமைப்படுத்தியதாக புகார் கூறினார். அதனால் போலீசார் அர்னவை கைது செய்து சிறையில் அடைந்தனர். அதன் பின் ஜாமீனில் அவர் வெளியில் வந்தார்.


சீரியல் டீம் தான் திவ்யாவுக்கு வளைகாப்பு செய்தது. அதன் பின் பிரசவத்தில் திவ்யா ஸ்ரீதருக்கு பெண் குழந்தை பிறந்தது. கணவர் கைவிட்ட நிலையில் தற்போது திவ்யா ஸ்ரீதர் கைக்குழந்தை உடன் தைரியமாக தனியாக ஷூட்டிங் செல்கிறாராம்.


அதை வீடியோ எடுத்து அவரே நெகிழ்ச்சியாக இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார். அதற்கு ரசிகர்கள் அவரை பாராட்டி வருகிறார்கள். மேலும் இவரை அவருடைய கணவர் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement