• Jul 24 2025

மறுபடியும் வளைகாப்பு நடத்திய திவ்யா-தீயாய் பரவும் வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவியில் பிரபல சீரியல் கேளடி கண்மணி  மூலம் அறிமுகமானவர்கள் திவ்யா ஸ்ரீ, ஆர்நவ் இவர்கள் இருவரும் பல வருடங்களாக காதலித்து வந்ததோடு அண்மையில் திருமணம் செய்து கொண்டதாகவும் திவ்யா கர்ப்பமாக இருப்பதாகவும் புகைப்படம் வெளியிட்டிருந்தனர்.

இருப்பினும் இந்த புகைப்படம் வெளியாகிய சில நாட்களிலேயே அர்னவ் தன்னை அடித்துக் கொடுமைப்படுத்துவதாகவும் தனது குழந்தையை அழிக்க முயற்சி செய்வதாகவும் திவ்யா வீடியோ வெளியிட்டிருந்தார்.

இதனை அடுத்து அர்னவ் மீது வழக்குப் போடப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தார்.தற்பொழுது பிணையில் விடுதலை பெற்று இருக்கின்றார். இதனை அடுத்து இருவரும் தமது கெரியரில் அதிக ஈடுபாடு காட்டி  வருவதோடு சீரியலில்  தொடர்ந்து நடித்து வருகின்றனர்.

இவ்வாறுஇருக்கையில்  திவ்யா குட்டி வயிறுடன் ஒவ்வொரு வீடியோக்களையும் பகிர்ந்து வருவார்.சில நாட்களுக்கு முன் சீரியல் நடிகர்கள் சில பேரால் இவருக்கு வளைகாப்பு நடந்திருந்த வீடியோவை பகிர்ந்து இருந்தார்.



இந்நிலையில் மறுபடியும் இவருக்கு வேறு சில நடிகர்களால் வளைகாப்பு நடந்துள்ளது.அந்த வளைகாப்பை செவ்வந்தி சீரியல் டீம் நடத்திஉள்ளது.

இதோ அந்த வீடியோ...



Advertisement

Advertisement