• Jul 25 2025

அரசியலுக்கு கட்டாயம் வருவீங்களா?- த்ரிஷா சொன்ன பதிலால் கை கொட்டி சிரித்த கார்த்தி-இதை யாரும் எதிர்பார்க்கலையே

stella / 2 years ago

Advertisement

Listen News!

பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம்  PS-2 திரைப்படம் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம்  PS-2 திரைப்படம் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின், ஷோபிதா துலிபாலா ஆகியோர் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.


இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை பிரபல ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.சில நாட்களுக்கு முன் நேரு ஸ்டேடியத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் படக்குழுவினர் மற்றும் நடிகர் கமல்ஹாசன், சிலம்பரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை விளம்பரப்படுத்த படக்குழுவினர் சென்னையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது நடிகை த்ரிஷாவிடம், "பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரம் அரசியல் நிபுணத்துவம் உடையது. அந்த கதாபாத்திரத்தில் நடித்த பிறகு அரசியலுக்கு வருவீங்களா?" என்ற கேள்விக்கு"சத்தியமா அதற்கு வாய்ப்பில்லை" என த்ரிஷா பதில் அளித்தார். இந்த கேள்வியை கேட்டு நடிகர் கார்த்தி கைதட்டி சிரித்தது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement