• Sep 08 2025

ஜெயிலர் வெற்றிக் கொணடாட்டத்தில் இருக்கும் நெல்சன்- இமயமலைக்குச் சென்ற ரஜினி போன் பண்ணி என்ன சொன்னார் தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் தான் ஜெயிலர். இப்படம் வெளியாகி ரசிகர்களிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலும் படத்திற்கு சிறப்பான வரவேற்புக் கிடைத்துள்ளது.

இதனால் ஜெயிலர் படக்குழுவினர் மிகவும் சந்தோஷமாக இருக்கின்றனர்.தமிழ்நாட்டில் முதல் நாள் அதிகாலை காட்சிகள் இல்லையென்றாலும், படத்திற்கு மாஸ் ஓபனிங் கிடைத்துள்ளது. இந்த ஆண்டு வெளியான படங்கள் முதல் நாள் அதிக வசூல் குவித்த படமாக சாதனை படைத்துள்ளது 'ஜெயிலர்'


படத்திற்கு வேறலெவலில் வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் நடிகர் ரஜினி தற்போது இமயமலை சென்றுள்ளார். படத்தின் ரிலீசுக்கு முன்பாகவே நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இமயமலை சென்றுள்ளார் . இந்நிலையில் நெல்சன் திலீப்குமார் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில், 'ஜெயிலர்' படத்திற்கு கிடைத்துள்ள அமோக வரவேற்பால் சூப்பர் ஸ்டார் ரஜினி மிகுந்த சந்தோஷத்த்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.


அத்துடன் படம் வெளியான நாளில் இருந்து நேற்றும், இன்றும் ரஜினி தனக்கு மெசேஜ் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். நீண்ட இடைவேளைக்கு பிறகு மறுபடியும் பாக்ஸ் ஆபிஸில் இங்க நான் தான் கிங் என நிரூபித்துள்ளார் .இதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த்  த.செ. ஞானவேல் இயக்கத்தில் 'தலைவர் 170' படத்தில் நடிக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement