• Jul 25 2025

மன அமைதிக்காக நடிகை சமந்தா எங்கு சென்றிருக்கிறார் தெரியுமா?- அவரே வெளியிட்ட போட்டோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

 நடிகை சமந்தா கடந்த வருடம் அரிய வகை தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டார். இதனால், அவர் நடித்துக்கொண்டிருந்த ‘குஷி’ உட்பட சில படங்களின் படப்பிடிப்புத் தள்ளிப் போனது. அதில் இருந்து மீண்டு வர சில மாதங்கள் சிகிச்சை மேற்கொண்டார். முழுமையாக குணமடைந்து படங்களில் மீண்டும் நடித்து வருகிறார்.


 இது தவிர ‘சில்லாட்டெல்’ என்ற வெப் தொடரில் நடித்து வருகின்றார். சமீபத்தில் இதன் ஷூட்டிங் நிறைவு பெற்ற நிலையில் சினிமாவில் இருந்து பிரேக் எடுப்பதாக அறிவித்தார் சமந்தா.


தற்போது சமந்தா மன அமைதிக்காக கோவில்களுக்கு செல்ல தொடங்கி இருக்கிறார். வேலூரில் இருங்க தங்க கோவிலுக்கு சமந்தா சென்று இருக்கிறார்.அதன் பின் கோவையில் இருக்கும் ஈஷா யோகா மையத்திற்கும் அவர் சென்றிருக்கிறார். இதுகுறித்த புகைப்படம் வெளியாகியுள்ளதைக் காணலாம். 



Advertisement

Advertisement