• Jul 24 2025

ஞாயிற்றுக் கிழமைகளில் இதைப் பண்ணவே மாட்டீங்களா மகாலட்சுமி- மோசமாக வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

சன்டிவியில் ஒளிபரப்பாகும் அன்பே வா என்னும் சீரியலில் நெக்கட்டிவ் ரோலில் நடித்து வருபவர் தான் நடிகை மகாலட்சுமி.இவர் ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு மகன் உள்ள நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக அவரை விவாகரத்து செய்தார்.

இதனை அடுத்து கடந்த செப்டம்பர் மாதம் தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்தார்.இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்து 3 மாதங்கள் ஆகும் நிலையில் இருவரும் அவரவர் வேலையில் கவனம் செலுத்து வருகின்னர்.


அவ்வப்போது அவுட்டிங் செல்லும் போட்டோக்களை ஷேர் செய்து வரும் மகாலட்சுமியும் ரவீந்தரும் தங்களின் காதலை மாறி மாறி பொழிந்து வருகின்றனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று மகாலட்சுமி தனது காதல் கணவர் ரவீந்தருடன் ஹோட்டலில் டின்னர் சாப்பிட்டுள்ளார்.


அந்த போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ள மகாலட்சுமி, சன்டே ஸ்பெஷல் டின்னர் வித் ஸ்பெஷல் மேன் மை புருஷா என கேப்ஷன் கொடுத்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் ஞாயிற்றுக்கிழமையான சமைக்கிறதே இல்லையா மகாலட்சுமி என கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement