• Jul 26 2025

பாடகர் ஷங்கர் மகாதேவனுக்கு இவ்வளவு பெரிய மகன்கள் இருக்கின்றார்களா?-ஆச்சரியத்தில் ரசிகர்கள்

stella / 3 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பல வருடங்களாக ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியினை மா கா பா ஆனந்த் மற்றும் ப்ரியங்கா ஆகியோர் தொகுத்து வழங்கி வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது ஜுனியர்களுக்கான 8 வது சீசன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. இதில் நடுவர்களாக கே.எஸ். சித்ரா, ஷங்கர் மகாதேவன், கல்பனா, எஸ்.பி. சரண் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.

அந்த வகையில் தென்னிந்திய சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பல மொழிகளில் பாடல்களை பாடி வருபவர் ஷங்கர் மகாதேவன். இவர் பாடிய பல பாடல்கள் இன்றும் முன்னணியில் நிற்கின்றது. இதற்கு எடுத்துக் காட்டாக என்ன சொல்ல போகிறாய் ,நீயா பேசியது பாடல்களைக் கூறினார்

இந்நிலையில், ஷங்கர் மகாதேவன் தனது மனைவி மற்றும் இரு மகன்களுடன் எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்தப் புகைப்படத்தை பார்த்தவர்கள் இவருக்கு இவ்வளவு பெரிய பிள்ளைகள் இருக்கின்றார்களா எனக் கேட்டு வருவதைக் காணலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement