• Jul 25 2025

விவாகரத்தானத்திற்கு பிறகும் கூச்சமே இல்லாமல் தனுஷ் செய்த செயல்-வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் கடந்த ஜனவரி மாதம் 17ம் தேதி தங்களின் பிரிவை சமூக வலைதளங்களில் அறிவித்தார்கள்.இது ரசிகர்களிடத்தே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

அதாவது 18வருடம் இல்லற வாழக்ககையில் ஈடுபட்டு இரண்டு புதல்வர்களை பெற்று எடுத்த இருவரும் ஏன் பிரிகிறார்கள் என்ற கேள்வியே.

அவர்களை சேர்த்து வைக்க ரஜினிகாந்த் முயற்சிகள் செய்ததாகவும், அதற்கு பலன் இல்லாமல் போனது என்றும் கூறப்பட்டது. அத்தோடு இன்று தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் ஒன்றாக மகன் படிக்கும் பள்ளி விழாவில் கலந்து கொண்டிருந்தனர். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் தனுஷ் ரஜினியின் ஜெயிலர் பட போஸ்ட்டரை ட்விட்டரில் பகிர்ந்து வாவ் என குறிப்பிட்டு இருக்கிறார்.

ரஜினி மகளை விவகாரத்து செய்துவிட்டு தற்போது கூச்சமே இல்லாமல் அவர் பட போஸ்ட்டரை பதிவிட்டு இருக்கிறாரே என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.




Advertisement

Advertisement