• Jul 25 2025

குற்றவாளி யார் என்ற உண்மையைக் கண்டு பிடித்த சித்து- செல்லம்மா சீரியலின் பரபரப்பான ப்ரோமோ

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றாக இருப்பது விஜய்டிவியாகும். இதில் ஒளிபரப்பாம் சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் என்பன ரசிகர்களைக் கவர்ந்தவையாகவே உள்ளன. அதிலும் பல சீரியல்கள் முடிவுக்கு வந்துள்ளன.

பல சீரியல்கள் பதிதாக ஆரம்பிக்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகின்றது. அவ்வாறு புதிதாக ஆரம்பிக்கப்பட்ட முக்கிய சீரியல் தான் செல்லம்மா. இந்த சீரியலில் கணவன் துணை இல்லாமல் தனது குழந்தையை வளர்க்கப் போராடும் தாய் பற்றியே கூறி நிற்கின்றது.

அந்த வகையில் செல்லம்மா தற்பொழுது ஜெயிலில் அடைக்கப்பட்டிருக்கிறார். சித்து அவர் தவறு செய்யவில்லை என்ற உண்மையை வீடியோ ஆதாரத்துடன் கண்டு பிடித்து விட்டார். ஆனாலும் அதனை நீதி மன்றில் காட்ட முதல் அவரை வழியில் பலர் தாக்குகின்றனர்.


இது குறித்த ப்ரோமோ தா் வெளியாகியுள்ளது. இதனால் செல்லம்மாவை சித்து காப்பாற்றி விடுவாரா எனக் காத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement