• Jul 25 2025

திடீரென முடிவிற்கு வரும் முக்கிய சீரியல்... கவலையில் ரசிகர்கள்...!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

கடந்த ஆண்டு பல்வேறு தமிழ் சேனல்களிலும் புத்தம் புதிய சீரியல்கள் ஒளிபரப்பாக தொடங்கின. இருப்பினும் பின்னர் கொரோனாவின் தாக்குதல் சற்றுக் குறைந்து பழைய சீரியல்களினுடைய படப்பிடிப்பு தொடங்கப்பட்டு மீண்டும் ஒளிபரப்பான நிலையில், அவற்றில் ஒரு சில சீரியலை தொடர முடியாமல் சீரியல் குழுவினர் அப்படியே கை விட்டனர். 


இதனையடுத்து அதற்கு மாற்றாக தான் புதிய சீரியல்கள் பலவும் ஒளிபரப்பாக தொடங்கின. அதில் ஒன்று ஜீ தமிழில் தற்போது ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் தொடரான 'வித்யா நம்பர் ஒன்' என்ற சீரியல். இந்த சீரியலின் உடைய பெயர் வித்தியாசமாக இருப்பதால், சீரியலின் கதையும் ரொம்ப வித்தியாசமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை வித்யா நம்பர் ஒன் சீரியல் ஆரம்பத்திலேயே ஏற்படுத்தியது. 


இந்த சீரியலானது இரண்டு பெண்களை சுற்றி நடக்கும் கதையை மையமாக கொண்டுள்ளது. இதில் இரண்டு பெண்களுக்கும் கல்வி பற்றிய ஒரு கண்ணோட்டம் இருக்கிறது. இவ்வாறாக விறுவிறுப்பான கதையம்சத்தை கொண்டமைந்துள்ள இந்த சீரியலினுடைய கிளைமாக்ஸ் காட்சிகள் விரைவில் இடம்பெற இருக்கின்றன. இதனால் இந்த சீரியலானது முடிவிற்கு வரப் போவதை அறிந்த ரசிகர்கள் "ஏன் இவ்வளவு சீக்கிரமாக முடிக்கிறீர்கள்" எனக் கவலையுடன் கேட்டு வருகின்றனர். 


Advertisement

Advertisement