• Jul 25 2025

பொன்னியின் செல்வன் படத்தில் த்ரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராய் அணிந்த தங்க நகைகளை ஏலத்தில் விட முடிவு

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் இலக்கியத்தின் கிளாசிக் வரலாற்று நாவல்களில் ஒன்றாக கருதப்படுவது கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல். இந்த நாவலை தற்பொழுது திரைப்படமாக இயக்கியுள்ளார். இதயக்குநர் மணிரத்னம்.இக்கதையானது சுமார் 70 ஆண்டுகள் பழமையானது.

இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகமானது செப்டெம்பர் மாதம் 30ம் திகதி மிகவும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பெரிய நடிக பட்டாளமே நடித்துள்ளனர். 


இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் குந்தவை மற்றும் நந்தினி ஆகிய கதாபாத்திரங்களில் த்ரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த கதாபாத்திரங்களுக்காக இருவருக்கும் சோழ காலத்தின் தங்க நகைகள்  உருவாக்கப்பட்டு அணிந்து நடித்தனர். 

இந்த உண்மையான தங்க நகைகளை பிரபல தங்க நகை நிறுவனம் ஒன்று ஸ்பான்சர் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் பட ரிலீஸான பின்னர் அந்த நகைகளை அந்த நிறுவனம் ஏலம் விட முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement

Advertisement