• Jul 25 2025

ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன யாரடி நீ மோகினி சீரியல் நக்ஷ்சத்திரா- இப்போ தான் இத்தனை மாசம் ஆச்சு

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்த பொழுது போக்கு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி வருவது தான் சீரியல்கள். அந்த வகையில் ஒவ்வொரு தொலைக்காட்சிகளிலும் பல்வே விதமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றது.

ஷு தமிழில் ஒளிபரப்பாகிய யாரடி நீ மோகினி என்னும் சீரியலில் வெண்ணிலா என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபல்யமானவர் தான் நக்ஷத்திரா.இந்த சீரியலில் கிராமத்துப் பெண்ணாக நடித்து அனைவரையும் கவர்ந்தார்.


இதனைத் தொடர்ந்து கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய வள்ளி சீரியலில் நடித்து வந்தார். இது ஒரு புறம் இருக்க கடந்த ஆண்டு ராகவ் என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.


இந்த நிலையில் இன்று ரசிகர்களுக்கு இரண்டு குட் நியூஸை கூறியிருக்கின்றார். அதில் தான் புதிதாக யூடியூப் சேனல் தொடங்கியுள்ளதாகவும் அதன் வழியாக தான் அம்மாவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இப்போது தான் மூன்று மாசம் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் நக்ஷ்சத்திராவுக்கு ரசிகர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.





Advertisement

Advertisement