• Jul 24 2025

ராதிகா வேண்டாம் என முடிவெடுத்த கோபி...அதிர்ச்சியில் ரசிகர்கள்...நடக்கப்போவது என்ன..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் அதிகமான ரசிகர்களால் பார்க்கப்படும் ஒரு சீரியலாக இருந்து வருகின்றது.மேலும்  இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்க போகும் என்று எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருக்கிறது.

இந்த  தொடரில் முக்கியமான கேரக்டரில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார் நடிகர் சதீஷ்.மேலும் இவர் ஏற்று நடித்துவரும் கேரக்டர் நெகட்டிவ் ஷேடில் அமைந்திருந்தாலும் ரசிகர்களின் பேவரைட்டாக அமைந்துள்ளது.

இவர் எப்பொழுதும் சமூகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருப்பார்.அதில் தனது செயற்பாடு குறித்து அடிக்கடி பதிவுகளையும் போடுவார்.

இந்நிலையில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.அதில் தனக்கு ராதிகாவும் வேண்டாம், என் செல்லம் இனியாவும் வேண்டாம் என்று கூறியுள்ளார். இட்லி பாத்திரத்தை கையில் கெட்டியாக பிடித்துள்ள கோபி, தனக்கு இட்லியும் வடையும் மட்டும் போதும் என்றும் கூறியுள்ளார். காமெடி கலந்த அவரது இந்தப் போஸ்ட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் லைக்ஸ்களையும் குவித்துள்ளது.இருந்தாலும் இவர் கொடுக்கும் அப்டேட்களால் சில ரசிகர்கள் இவரை திட்டி வருகின்றனர்.அடுத்து இந்த சீரியலில் என்ன நடக்கப்போகின்றது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.




Advertisement

Advertisement