• Jul 26 2025

ஜனனி போட்ட பிளான்... குத்தலாக பேசிய குணசேகரன்... ஜான்சிராணிக்கு முகத்தடி கொடுத்த விசாலாட்சி... சூடு பிடிக்கும் 'எதிர்நீச்சல்'..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல ஹிட் தொடரான 'எதிர்நீச்சல்' சீரியலிற்கு என்று ஏராளமான ரசிகர்கள் உண்டு. இதில் சமீபகாலமாக ரசிகர்கள் பலரது மனதில் ஓடிக் கொண்டிருக்கும் கேள்வி என்னவெனில் ஆதிரை கல்யாணம் இறுதியில் யாருடன் நடக்கும் என்பது தான்.


இந்நிலையில் இன்றைய நாளுக்குரிய ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் ரேணுகாவும் ஜனனியும் "கோயிலுக்கு வாறதாக வேண்டி இருக்காங்க, நேர்த்திக்கடனாம் ஆதிரையை கூட்டிற்கு கோயிலுக்கு போகணும் என்று கேட்கிறாங்க" என குணசேகரனிடம் கூறுகின்றார்.


அதற்கு குணசேகரன் "நேர்த்திக்கடன் முந்தநாத்திக்கடன் கடன் என்று எதையாவது சொல்லாதம்மா" என விசாலாட்சியை பார்த்து குத்தலாக கூறுகின்றார். 


மேலும் ஜான்சிராணி "அது என்னம்மா புது தினுசா இருக்கு, குல தெய்வம் கோவிலுக்கு போறது" என நக்கலாக கேட்கின்றார். அதனைக் கேட்டதும் விசாலாட்சி "ஏய் வாயை மூடுடி" எனக் கூறி ஜான்சிராணியைத் திட்டுகின்றார். இவ்வாறாக இன்றைய ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது.


Advertisement

Advertisement