• Jul 26 2025

உயிரை மாய்க்க முயன்ற குணசேகரன்... ஜான்சிராணியினால் தொடரும் மிரட்டல்கள்... 'எதிர்நீச்சல்' இனி நடக்கப் போவது என்ன..?

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப் சீரியல்களில் அதிகம் மக்கள் விரும்பிப் பார்க்கும் சீரியல் 'எதிர்நீச்சல்'. இந்த சீரியலானது ஏனைய சீரியல்களை விடவும் ஏராளமான ரசிகர்களைக் கொண்டுள்ளது. மேலும் இந்த சீரியலானது அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பை அடிக்கடி தூண்டிய வண்ணம் இருக்கின்றன.


இந்நிலையில் இன்றைய நாளுக்குரிய ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் ஜனனி சக்தியிடம் "என்ன சக்தி பேசினியா" எனக் கேட்கின்றார். பதிலுக்கு சக்தி "எனக்கும் லைன் கிடைக்கல, என்னனு ஒண்ணுமே தெரியல" என்கிறார். அதற்கு ரேணுகா என்னடி இவன் தெரியல என்கிறான் என்று கூறுகின்றார்.


மறுபுறம் குணசேகரனின் கழுத்தில் துணி ஒன்று கடடப்பட்டிருக்கின்றது. அருகில் நின்ற ஜான்சிராணி "உன்னை அண்ணன்னு கூப்பிடணுமா இல்லையா என்று இந்த கல்யாணத்தில் தான் தெரியப்போகுது" என்கிறார். 


ஆகவே குணசேகரனின் கழுத்தில் உள்ள துணியை வைத்துப் பார்க்கும் போது குணசேகரன் உயிரை மாய்க்க முயற்சி பண்ணி இருப்பது போல் தெரிகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் உண்மை என்ன என்பதை.

Advertisement

Advertisement