• Jul 25 2025

ஜனனியை மருமகள் என ஏற்றுக் கொண்ட குணசேகரனின் அம்மா- அப்பத்தா எடுத்த முடிவால் கடும் கோபத்தில் இருக்கும் மருமகள்மார்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!


சன்டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர் நீச்சல்.இந்த சீரியலில் இன்றைய தினம் ஜனனியின் அம்மாவைப் பார்த்த குணசேகரனின் அம்மா ஜனனி நல்ல பொண்ணு என்று சொல்கின்றார்.

அதற்கு ஜனனியின் அம்மா நல்ல பிள்ளை என்றதால் தான் உங்க  மகன் விவாகரத்துக் கொடுத்தான் என்று கேட்ட அதிர்ச்சியடைகின்றார்.பின்னர் இரவு ஆனதும் உடல் நிலை சரி இல்லை என்று அவர் நந்தினி என்று அழைக்க நந்தினி, ஜனனி எல்லோரும் வர குணசேகரன் யாரும் இங்க இருக்க மாட்டீங்களா? எங்க போனீங்க எல்லோரும் என்று கேட்கிறார்.


அதற்கு அவரது அம்மா இங்கே நிம்மதியா இருக்கிற மாதிரியா இருக்கு என்று குணசேகரனுக்கு பதிலடி கொடுத்துள்ளார். இது ஒரு புறம் இருக்க அப்பத்தா குணசேகரனின் டீலுக்கு ஓகே சொல்லி விட்டார்.இதனால் மருமக்கள் அனைவரும் அப்பத்தாவின் மீது கோபத்தில் இருக்கின்றனர். இதனால் ஆதிரையின் திருமணம் எப்படி நடக்கப் போகின்றது என்பது இனி வரும் எபிஷோட்டுகளில் தான் தெரியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement