• Jul 26 2025

எதிர்த்து பேசும் குணசேகரனின் மனைவி... வலுக்கட்டாயமாக கரிகாலனுடன் ஆதிரையை அமர வைக்கும் கதிர்...கத்தும் ஜனனி..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ஹிட் சீரியல்களில் ஒன்று 'எதிர்நீச்சல்'. ஏனைய சீரியல்களை விடவும் இந்த சீரியலிற்கு என ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உண்டு. தினம் தினம் இந்த சீரியலானது அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பை தூண்டிய வண்ணம் தான் இருக்கின்றது.

அந்த வகையில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று ப்ரமோ  வெளியாகியுள்ளது.

எங்களையும் மனிசங்களாக மதியுங்கள் என குணசேகரனின் மனைவி கூற கடுப்பான குணசேகரன் போதும்மா இதோட நிறுத்துங்க என கூறுகின்றார்.

இதன் பின்னர் கோயிலுக்கு சென்ற குணசேகரனின் குடும்பத்தில் சண்டை ஏற்படுகின்றது.அதாவது ஆதிரையை கரிகாலனுக்கு அருகில் உட்காரும் படி கதிர் சொல்கின்றார்.ஆனால் ஆதிரையோ அதற்கு மறுப்பு தெரிவிக்கின்றார்.

இருந்தும் ஆதிரை மறுப்பு தெரிவிக்க கதிர் ஆதிரையின் கையை பிடித்து வலுக்கட்டாயமாக அழைக்கின்றார்.இதன் போது ஜனனி என்ன பண்ணுறீங்க ஸ்ராப்பிற் என கத்துகின்றார்.இத்துடன் இந்த ப்ரமோ நிறைவடைகின்றது.

Advertisement

Advertisement