• Jul 25 2025

கரிகாலனால் அம்பலமான குணசேகரின் திட்டம்...ஆதிரையின் கல்யாணம் யாருடன்...பரபரப்பு திருப்பங்களுடன் 'எதிர்நீச்சல்' சீரியல்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான எதிர்நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது.

அதாவது நேற்றைய எபிசோட்டில் வீட்டில் இருக்கும் பெண்கள் குணசேகரனை எதிர்த்து பேசுகின்றனர்.இதானால் கோபமடைந்த குணசேகரன்எனக்கு மரியாதை குறைஞ்சிட்டு வருது என கொந்தளித்து பேசுகின்றார்.இந்நிலையில் தற்போது  ப்ரோமோ வீடியோ வெளிவந்திருக்கின்றது.

அதாவது இதற்கு பதில் இன்னமும் கொஞ்ச நேரத்தில் தெரிந்திடும் என ஜனனி கூறுகின்றார்.இதனை அடுத்து குணசேகரன் வீட்டில் ஸ் கே ஆர்-ன் மனைவி சாருபாலா வந்து நிற்கின்றார்.அதன் போது குணசேகரன் “நீங்க அன்று வீட்டிற்கு வந்து இருந்த போது நான் ஒரு மாதிர் பேசிட்டேன் அது மனசிற்கு உருத்தலாகவே இருந்தது.” என கூறுகின்றார்.


இதனை அடுத்து கரிகாலன் வேகத்தோடு வீட்டிற்கு வருகின்றார்.இதன் போது குணசேகரனை பிடித்து..“ இவங்களை நடு வீட்டிற்குள் வச்சு பேசிட்டு இருக்கிறீங்க...அப்ப தோட்டத்தில் வச்சிட்டு எங்களுக்கு சொன்னது என்ன..? ” என கோவமாக உண்மையை  போட்டு உடைக்கின்றார்.


இத்துடன் இந்த ப்ரமோ நிறைவடைகின்றது.இதனால் குணசேகரன் அடுத்து என்ன முடிவு எடுக்கப்போகிறார்..? ஆதிரையின் கல்யாணம் எப்படி நடக்கப்போகின்றது என்று இன்றைய எபிசோட்டில் பார்ப்போம்.



Advertisement

Advertisement