• Jul 25 2025

வெளியானது 'கண்ணை நம்பாதே' பாடல்.. ஆத்மிகாவுடன் ரொமான்ஸில் அசத்தும் உதயநிதி.. வீடியோ இதோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

மு.மாறன் இயக்கத்தில் தற்போது உருவாகியிருக்கும் படம் 'கண்ணை நம்பாதே'. இப்படத்தில் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்திருக்கிறார். 


மேலும் இவர்களுடன் இணைந்து பிரசன்னா, ஸ்ரீகாந்த், பூமிகா, வசுந்தரா, சதீஷ், சுபிக்‌ஷா, பழ கருப்பையா என திரைப் பிரபலங்கள் பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படம் ஆனது வருகிற மார்ச் 17 ஆம் தேதி வெளியாக இருப்பதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.


இதனையடுத்து இப்படத்திற்கான புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கண்ணை நம்பாதே படத்தில் இடம்பெற்ற 'காத்திரு' என்கிற ரொமாண்டிக் பாடலின் லிரிக்கல் வீடியோவை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 


அதாவது சித்து குமார் இசையமைத்துள்ள இப்பாடலை லக்‌ஷ்மிகாந்த் தன் காந்தக் குரலில் பாடி இருக்கிறார். தற்போது வெளியாகியுள்ள இந்த லிரிக்கல் வீடியோவில் ஆத்மிகா, உதயநிதி இடையேயான ரொமாண்டிக் காட்சிகளும் இடம்பெற்று உள்ளன.

இதனால் இப்பாடலினை ரசிகர்கள் அதிகம் வைரலாக்கி வருகின்றனர்.


Advertisement

Advertisement