• Jul 24 2025

'கழுவேத்தி மூர்க்கன்' படம் எப்படி இருக்கிறது..? அருள்நிதி அசத்தினாரா..? சொதப்பினாரா..? ரசிகர்களின் ட்விட்டர் விமர்சனம்...!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

அருள்நிதி நடிப்பில் இன்றைய தினம் வெளியாகியுள்ள திரைப்படம் 'கழுவேத்தி மூர்க்கன்'. இயக்குநர் கெளதமராஜ் இயக்கி உள்ள இப்படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து சந்தோஷ் பிரதாப், முனீஸ்காந்த் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தை பார்த்த ரசிகர்கள் டுவிட்டரில் படம் குறித்த விமர்சனத்தை பதிவிட்டு வருகின்றனர். அது குறித்துப் பார்ப்போம்.


அந்தவகையில் நெட்டிசன் ஒருவர் கூறுகையில் "கழுவேத்தி மூர்க்கன் வழக்கமான கிராமத்து கதையம்சம் கொண்ட படமாக உள்ளது. உற்சாகமூட்டும் வகையில் இல்லை. இரண்டாம் பாதியில் மட்டும் சில காட்சிகள் நன்றாக உள்ளது. நல்ல மேசேஜ் ஆனா அதனை விறுவிறுப்பின்றி சொல்லி இருக்கிறார்கள். கிளைமாக்ஸ் அருமை. அருள்நிதி மற்றும் சந்தோஷ் பிரதாப் சிறப்பாக நடித்துள்ளார்கள்" என பதிவிட்டுள்ளார்.


மற்றோரு நபர் கூறுகையில் "கழுவேத்தி மூர்க்கன் விறுவிறுப்பான படமாக உள்ளது. அருள்நிதியின் நடிப்பு வேறலெவல். துஷாரா விஜயன் சிறப்பாக நடித்துள்ளார். சந்தோஷ் பிரதாப் எதிர்பார்க்கவே இல்லை. வெறித்தனமா நடிச்சிருக்காரு. டி.இமானின் பின்னணி இசை நன்றாக ஒர்க் அவுட் ஆகி உள்ளது. படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்" எனத் தெரிவித்துள்ளார்.


இன்னொரு நெட்டிசன் குறிப்பிடுகையில் "கழுவேத்தி மூர்க்கன் சராசரிக்கும் குறைவான படமாகவே உள்ளது. மெதுவான திரைக்கதை உடன் கூடிய வழக்கமான கிராமத்து படமாக உள்ளது. எதுவும் புதிதாக இல்லை. முதல்பாதி மோசம், இரண்டாம் பாதி பரவாயில்லை. அருள்நிதி நடிப்பு நன்றாக இருந்தது. துஷாரா விஜயன், சந்தோஷ் பிரதாப் ஆகியோர் சிறந்த பங்களிப்பை கொடுத்துள்ளார்கள். டி.இமானின் பின்னணி இசையும் நன்றாக இருந்தது" என தனது கருத்தைப் பதிவிட்டுள்ளார்.


இவ்வாறாக 'கழுவேத்தி மூர்க்கன்' படத்திற்கு கலவையான விமர்சனங்களை ரசிகர்கள் கொடுத்து வருவது புலனாகின்றது.

Advertisement

Advertisement