• Jul 24 2025

எனக்கு இந்த சீரியலில் முக்கியத்துவமே இல்லை- செவ்வந்தி சீரியலில் இருந்து திடீரென விலகிய முக்கிய பிரபலம்

stella / 2 years ago

Advertisement

Listen News!



பொதுவாக சன்டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் காணப்படுகின்றது. அந்த வகையில் சன்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் செவ்வந்தி.இதில் கதாநாயகியாக திவ்யா நடித்து வருகின்றார்.

மேலும் இந்த சீரியலில் கார்த்திக் என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் நிதின் கிரிஷ். இவர் தற்பொழுது இந்த சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.


அதாவது இந்த சீரியலில் ஸ்கிறீன் பேஷ் தனக்கு கிடைக்கவில்லை என்றும் இந்த சீரியலில் எனக்கு முக்கியத்துவம் இல்லாத காரணத்தினாலும் சீரியலில் இருந்து விலகுகின்றேன். வெகு சீக்கிரத்தில் நடிக்க போகும் புதிய சீரியல் பற்றி அறிவிப்பேன் என்றும் கூறியுள்ளார்.மேலும் இவர் சீரியலில் இருந்து விலகியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement