• Jul 24 2025

எனக்கு தெரியாது கடவுள் என்ன நினைக்கிறாரோ அது தான்-விஜய்யின் அரசியல் ஈடுபாடு குறித்து பதில் அளித்த ஷோபா!

stella / 2 years ago

Advertisement

Listen News!

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரிப்பில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் வாரிசு. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.  பொங்கலுக்கு இந்த படம் வெளியாக உள்ளது.

வாரிசு படத்தினை தொடர்ந்து நடிகர் விஜய்யின் அடுத்த 67வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த படம் கேங்ஸ்டர் வகைமையில் உருவாக உள்ளது என லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளார். இந்த படத்தின் ஆரம்பக் கட்ட முன் தயாரிப்பு பணிகளில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். சாமி தரிசனம் செய்த பிறகு ஷோபா சந்திரசேகர் பத்திரிகையாளர்களை சந்தித்து சில கேள்விகளுக்கு பதில் அளித்தார். குறிப்பாக விஜய் அரசியலில் ஈடுபடுவது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?" என்ற கேள்விக்கு "அது பற்றி ஒன்னுமே தெரியாது.


  அது பற்றி ஒன்னுமே தெரியாது." என்று பதில் அளித்தார். மேலும் அரசியலில் ஆலோசனை & அறிவுரை எதாவது? என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த ஷோபா, "ஒன்னுமே கிடையாது. விஜய் என்ன முடிவு எடுக்கிறாரோ அதான். கடவுள் என்ன நினைக்கிறாரோ அதான்." என ஷோபா சந்திரசேகர் பதில் அளித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement