• Jul 26 2025

எனக்கு அந்த மாதிரி படங்களில் நடிக்க தான் பிடிக்கும்... ரித்திகா சிங் ஓபன் டாக்!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

நடிகை ரித்திகா சிங் தற்போது இயக்குநர் ஹர்ஸ் வரதன் இயக்கத்தில் ‘இன் கார்’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.  இந்த திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை, சாலிகிராமம் பிரசாத் லேப்பில் நடைபெற்றது.

இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ரித்திகா சிங்கிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்க்கு அவரும் பதில் அளித்தார். அப்போது செய்தியாளர் ஒருவர் நீங்கள் ஏன் முன்பை போல இப்போது தமிழ் படங்களில் நடிக்கவில்லை..? என்று கேட்க அதற்கு பதில் அளித்த அவர் ” எனக்கு தமிழ் படங்களில் நடிக்கவேண்டாம் என்று யோசனை இல்லை. நிறைய தமிழ் படங்களில் நடிக்கவேண்டும் என்று தான் ஆசை இருக்கிறது.

ஆனால் படங்களைத் நான் தேர்வு செய்து நடிக்கிறேன்.  குறிப்பாக சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால், நல்ல கதையம்சம் இருக்கும் படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறேன்.  எனவே நல்ல கதை அமைந்தால் நிச்சயமாக மீண்டும் நடிப்பேன்.

எனக்கு காமெடியான படங்கள் மற்றும் அதே மாதிரி ஆக்சன் படங்கள் ஆகிய படங்கள் தான் பிடிக்கும். எனவே அந்த மாதிரி படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக நடிப்பேன்” என கூறியுள்ளார். 


Advertisement

Advertisement