• Jul 25 2025

எனக்கு எப்பவுமே திரும்ப கலாய்க்க தெரியாது- சாய் பல்லவி சொன்ன ஷாக்கிங் நியூஸ்- அடடே இப்படியொரு விஷயம் இருக்கா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

நடிகை சாய் பல்லவி, மலையாளத்தில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன பிரேமம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் மலர் டீச்சராக வந்து இளசுகளின் மனதை கொள்ளையடித்தார். 

இப்படத்தின் வெற்றிக்கு சாய் பல்லவியின் நடிப்பும் முக்கிய காரணமாக அமைந்தது. இதையடுத்து தமிழ் திரையுலகில் எண்ட்ரி கொடுத்த அவர், மாரி 2, என்.ஜி.கே., தியா போன்ற படங்களில் நடித்தார்.தமிழில் சாய் பல்லவிக்கு பெரியளவில் வெற்றி கிடைக்காததால், தெலுங்கில் நடிக்கத் தொடங்கினார். 


அங்கு இவர் நடித்த படமெல்லாம் வேறலெவலில் ஹிட் ஆனதால் குறுகிய காலத்திலேயே டோலிவுட்டில் முன்னணி ஹீரோயினாக உயர்ந்தார் சாய் பல்லவி. இதையடுத்து பல்வேறு பெரிய நடிகர்களுடன் நடிக்க வந்த வாய்ப்புகளையும் அசால்டாக நோ சொல்லி திருப்பி அனுப்பிவிடுகிறாராம் சாய்பல்லவி.


இந்த நிலையில் பிரபல சேனலுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது என்டைய படத்தை பார்த்த பிரபலங்கள் எனக்கு வாழ்த்து சொல்லும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்கு. செட்ல என்னை கலாய்ப்பாங்க எனக்கு திரும்ப கலாய்க்க தெரியாது. நான் ஏதாவது சொன்னால் 10 நாள் அதையே வச்சு செய்வாங்க. எனக்கு திரும்ப அவங்களுக்கு பதில் சொல்ல தெரியாது என்னும் நக்கலாகப் பேசியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Advertisement

Advertisement