• Jul 25 2025

சில்க் ஸ்மிதா என்னை ஓங்கி அடிச்சா இறந்த செய்தி கேட்டதும் ரொம்ப சந்தோஷப்பட்டேன்- நடிகை ஷகிலா சொன்ன அதிர்ச்சித் தகவல்

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் 70,80 களில் ஐட்டம் சாங் பாடலுக்கு நடனம் ஆடி ரசிகர்களிடம் பிரபல்யமானவர் சில்க் ஸ்மிதா.நடனம் ஆடியது மட்டுமல்லாது சில படங்களில் சின்ன சின்ன வேடங்களிலும் நடித்து உள்ளார்.

அதேபோல், கேரளாவில் ஆபாச பட நடிகையாக இருந்தவர் ஷகிலா. பல படங்களில் ஆபாசமாக நடித்து மம்முட்டி மற்றும் மோகன்லால் படங்களுக்கே டஃப் கொடுத்தவர். தமிழிலும் பல படங்களில் இவர் நடித்துள்ளார்.இருப்பினும் இவருக்கு நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது குக்வித் கோமாளி நிகழ்ச்சி தான்.


இதில் விதவிதமாக சமைத்துக் கொடுத்து எல்லோருக்கும் அம்மாவாக மாறினார்.மேலும் யூடியூப்பில் சர்ச்சையில் சிக்கிய பெண்களை அழைத்துவைத்து பேட்டியெடுத்து வருகிறார்.

இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய ஷகிலா ‘எனக்கு அப்போது 18 வயதுதான் இருக்கும். சில்க் ஸ்மிதா நடித்த ஒரு படத்தில் நான் நடித்தேன். கதைப்படி அவர் என்னை அறைய வேண்டும். லேசாக அறைவேன் என சொல்லிவிட்டு மிகவும் வேகமாக அறைந்தார். இதனால் கோபித்துகொண்டு அப்படத்திலிருந்து வெளியேறினேன்.


அவர் இறந்தவுடன் மிகவும் சந்தோசப்பட்டேன். அந்த வயதில் எனக்கு அந்த பக்குவம்தான் இருந்தது. ஆனால், இப்போது என் கோபம் முட்டாள்தனமானது என புரிகிறது. அவரே இறந்துவிட்டார். அவர் மீது அன்பு இல்லை என்றாலும் வெறுப்பை வளர்க்க கூடாது என்கிற பக்குவம் வந்துவிட்டது’ என அவர் பேசியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement