• Jul 25 2025

நான் பாம்பு என்றால் அசீம் கோமாளி- ஒரு இன்டர்வியூவுக்கு இவ்வளவு அக்கப்போரா- கொந்தளிக்கும் மகேஸ்வரி

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் ரசிகர்களால் அதிகம் கவரப்பட்ட ரியாலிட்ரி ஷோக்களில் ஒன்று தான் பிக்பாஸ். இதுவரை 6 சீசன்கள் வரை நிறைவடைந்துள்ள இந்த நிகழ்ச்சியினை கடந்த ஆறு வருடங்களாக உலகநாயகன் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகின்றார்.அந்த வகையில் இதன் ஆறாவது சீசன் சில வாரங்களுக்கு முன்னர் தான் முடிவடைந்தது.

இந்த சீசனின் இறுதியில் ஷிவின், விக்ரமன், அசீம் என மூவரிடையே கடும் போட்டி நிலவியது.பல பேர் விக்ரமன் தான் வெற்றியாளராக இருக்க போகின்றார் என்று எதிர்பார்த்து வந்த நிலையில் அதிக ஓட்டுகள் பெற்று அசீம் டைட்டில் பட்டத்தை வாங்கினார். சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சிலர் ஆதரவு கொடுத்தும் வந்தனர்.


 அதிலும் பிக் பாஸ் போட்டியாளர் மகேஸ்வரி சமூக வலைத்தளங்களில் அசீமிற்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு வந்தார்.இந்நிலையில் அசீம் லைவ் வீடியோ ஒன்றில் பங்கேற்றுள்ளார். அப்போது அவரிடம் பிக் பாஸ் போட்டியாளர்களில் யார் பாம்பு? என கேள்வி கேட்டனர். அதற்கு அசீம்," மகேஸ்வரி தான் பாம்பு" என்று கூறினார்.


இந்நிலையில் இதற்கு பதில் அடி கொடுக்கும் வகையில் மகேஸ்வரி, " யாரோ என்னை பாம்பு என்று சமூக வலைத்தளங்களில் கூறியுள்ளனர். இது போன்று பல கோமாளிகள் சொல்வார்கள். நம்மை பாம்பு என்று சிலர் அழைக்கலாம், ஆனால் அந்த கோமாளிகளால் நம்மை ஜெயிக்க முடியாது" என்று கூறியுள்ளார். தற்போது இவரின் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  

Advertisement

Advertisement