• Jul 26 2025

தேவைப்பட்டால் செருப்புக்கு ஏத்த மாதிரி கூட கால மாத்திக்கலாம்"- ஹிப் ஹாப் ஆதியை குழப்பி விட்ட சுந்தர்.சி

stella / 3 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் காமெடி திரைப்படங்களை சிறப்பாக எடுக்கக் கூடிய இயக்குநராக வலம் வருபவர் தான் சுந்தர்.சி இவர் வித்யாசாகர், யுவன் சங்கர் ராஜா, இம்மான், தேவா, சிற்பி, ஹிப் ஹாப் ஆதி ஆகிய இசையமைப்பாளர்களையே தனது படங்களில் இசையமைப்பதற்கு தேர்ந்தெடுத்து நடித்து வருவார்.

அந்த வகையில் ஹிப்ஹாப் ஆதியுடன் இணைந்து 5 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். அந்த வகையில் அரண்மனை 2, கலகலப்பு 2, வந்தா ராஜாவாதான் வருவேன், ஆக்ஷன் என சுந்தர்.சி இயக்கிய படங்களுக்கு ஆதி இசையமைத்தார்.

பாடல் கம்போஸிங் செஷனையே ஷூட் செய்து அதன் மூலம் படங்களை புரமோட் செய்தவர்கள் தான் சுந்தர்.சி - ஆதி கூட்டணி.அதற்கு எடுத்துக்காட்டாக ஆம்பள பட புரமோஷனைக் கூறலாம். சுந்தர்.சி மற்றும் விஷால் பாடல் சூழ்நிலையைச் சொல்லி பல்லவியும், சரணமும் இப்படியெல்லாம் வர வேண்டும் என்று சொல்ல சொல்ல, ஹிப் ஹாப் ஆதி அவர்கள் சொல்வதெற்கெல்லாம் தலையசைத்துவிட்டு இறுதியாக ஒரு சந்தேகம் கேட்பார். "சரணம், பல்லவின்னு சொல்றீங்களே… அப்படின்னா என்ன?" என்று ஆதி கேட்டவுடன், சுந்தர்.சியும் விஷாலும் அதிர்ச்சியாக ஒருவரை ஒருவர் பார்ப்பது போல ஒரு வீடியோ வெளியாகி பிரபலமானது.

பின்னணி இசையின் போது, ஒரு காட்சிக்கு ஆதி இசையமைத்தது சுந்தர்.சிக்கு பிடிக்கவில்லை என்றால் மாற்றச் சொல்வாராம். அப்போது ஹிப் ஹாப் ஆதி அவரை சமாதானப்படுத்த முயற்சி செய்தால்,"தம்பி, காலுக்குதான் செருப்பு வேணும். செருப்புக்கு கால் தேடக் கூடாது" என்று கூறுவாராம்.

சில சமயங்களில், தான் சொல்லும் சூழ்நிலையை விட சிறப்பாக ஒரு பாடலை ஆதி கம்போஸ் செய்தால், தான் காட்சியை மாற்றிக் கொள்கிறேன் என்று சுந்தர்.சி சொல்வாராம். அப்போது அந்த செருப்பு உதாரணத்தை ஆதி கூறினால்,"இல்லடா தம்பி, தேவைப்பட்டால் செருப்புக்கு ஏத்த மாதிரி கூட கால மாத்திக்கலாம்" என்று நேர்மாறாகவும் கூறுவாராம் சுந்தர்.சி என்பதும் குறிப்பிடத்தக்கது

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement