• Jul 24 2025

அப்படி இருந்தால் வாழ்க்கை சின்னதாகி விடும்- கவர்ச்சி புகைப்படத்துடன் ராஷ்மிகா போட்ட பதிவு

stella / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் பான் இந்திய நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை ராஷ்மிகா . இவர் கடைசியாக விஜய் நடிப்பில் வெளியாகியிருந்த வாரிசு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.அப்படத்தில் அவருக்கு நடிக்க பெரியளவில் ஸ்கோப் இல்லை என்றாலும், டான்ஸில் விஜய்க்கே டஃப் கொடுத்து ரசிகர்களை மெர்சலாக்கினார். 

தற்பொழுது இவர் தமிழில் எந்தப் படத்திலும் கமிட்டாகவில்லை.ஆனால் ஹிந்தி தலுங்கு ஆகிய மொழிகளில் பிஸியாக நடித்து வருகின்றார். ஹிந்தியில் ஏற்கனவே இவர் நடிப்பில் குட் பாய் மற்றும் மிஷன் மஜ்னு ஆகிய படங்கள் வெளியான நிலையில், தற்போது ரன்பீர் கபூர் ஜோடியாக அனிமல் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார் ராஷ்மிகா.


இதற்கு அடுத்தபடியாக தெலுங்கில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக புஷ்பா 2 படத்தில் நடித்து வருகிறார். சுகுமார் இப்படத்தை இயக்கி வருகிறார். இதுதவிர விஜய் தேவர்கொண்டாவுடனும் ஒரு படத்தில் ராஷ்மிகா நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜய் தேவர்கொண்டா, கீதா கோவிந்தம் படத்தின் இயக்குநருடன் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளார். அப்படத்தில் தான் ராஷ்மிகா ஹீரோயினாக நடிப்பதாக கூறப்படுகிறது.


இந்நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனா இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படம் ஒன்றை பதிவிட்டு கருத்து சொல்லி உள்ளார். அதன்படி அவர் பதிவிட்டுள்ளதாவது : “ஹாப்பியா இருங்க... தொடர்ந்து நம்பிக்கை வையுங்கள். உங்களது சந்தோஷமும், அமைதியும் அதிலிருந்து தான் கிடைக்கும். நெகட்டிவிட்டியோடு இருந்தால் வாழ்க்கை மிகவும் சின்னதாகிவிடும்” என குறிப்பிட்டிருந்தார் ராஷ்மிகா. சமீபத்தில் அவரைப்பற்றி எதிர்மறை கருத்துகள் சோசியல் மீடியாவில் அதிகம் பரவி வந்த நிலையில், ராஷ்மிகா இவ்வாறு பதிவிட்டுள்ளது வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement